நடிகர்கள்:-
சிவகார்த்திகேயன்,
பிரியங்கா மோகன்,
SJ சூர்யா,
சூரி,
சமுத்திரக்கனி
ராதாரவி,
முனிஸ்காந்த்,
காளி வெங்கட்,
பாலா,
சிவாங்கி,
ஆர்ஜே.விஜய்
மற்றும் பலர்.
இசை:-
அனிருத்
தயாரிப்பு:-
லைகா ப்ரொடக்ஷன்ஸ் & SK ப்ரொடக்ஷன்ஸ்
இயக்கம்:-
சிபி சக்ரவர்த்தி
கதை:-
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவருக்கு மகன் சிவகார்த்திகேயன் பிறக்கின்றார். சமுத்திரகனியின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்ததால் மகனை மீது அதிக ஈடுபாடு இல்லாமல் கண்டிப்பாக இருந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே அப்பாவிற்கு பயந்து வளரும் ஹீரோ சிவகார்த்திகேயன்,
சிறுவயதிலிருந்தே தான் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தேடி வருகிறார் சிவகார்த்திகேயன், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான் என்று நினைக்கும் சமுத்திரகனியிடம், சாதித்து காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.அப்பா சமுத்திரகனியின் கட்டாயத்தின் பேரில் இன்ஜினீயரிங் காலேஜில் சேர்க்கப்படுகிறார்.
காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக அறிமுகமாகும் எஸ். ஜெ. சூர்யாவிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் பல இடையூறுகள்,தடைகள் ஏற்படுகின்றது. இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.