உலக சாதனை படைத்த பும்ரா வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (29 ரன்கள்) விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.




இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. பின்னர், கொரோனா தொற்று பரவல் காரணமாக 5-வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. நேற்று பர்மிங்காமில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பும்ரா களமிறங்கினார்.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் 

ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83-வது ஓவரை வரலாறாக மாற்றினார் பும்ரா.

முதல் பந்தை பவுண்டரி அடித்தார்

அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' ஆகி அதுவும் பவுண்டரி ஆகில் 5 ரன்கள் கிடைத்தது. 

அடுத்த பந்து நோபாலாக வந்ததால் சிக்ஸர் அடித்தார் பும்ரா.

அதற்கடுத்து ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, இங்கிலாந்து பவுலர்கள் மிரண்டனர். அவர் 4,6,4,4,4,6,1 ரன்கள் எடுத்தார்

வீடியோ;-

https://twitter.com/SubbuSubash_17/status/1543185061482156033


Post a Comment

0 Comments